FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பேஸ்புக்கால் பரீட்சைகளைக் கோட்டை விடும் மாணவர்கள்! பெற்றோர்கள் கவலை

 

பேஸ்புக்கால் பரீட்சைகளைக் கோட்டை விடும் மாணவர்கள்! பெற்றோர்கள் கவலை

பேஸ்புக் போன்ற இணையத் தளங்களில் பிள்ளைகள் அதிக நேரத்தைச் செலவிடுவதால் அவர்கள் தங்களது பரீட்சைகளைக் கோட்டை விட்டு விடுவதாக பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர்.

பெற்றோர்களுள் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தக் கவலையுடன் காணப்படுகின்றனர்.12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்...பட்டவர்கள் படிப்பு நோக்கத்திற்காக இணையத்தளங்களைப் பயன்படுத்துவதை விட சமூக வலையமைப்புக்களிலேயே அதிக நேரத்தைக் கழிக்கின்றனர்.

மாணவர்களுள் அரைவாசிப்பேர் டுவிட்டர்,மை ஸ்பேஸ் போன்ற சமூக வலையமைப்புக்களை தினசரிப் பாவிப்பவர்களாகவே உள்ளனர். 40 வீதமானவர்கள் இணையத்தளம் ஊடாக இசையை ரசிக்கின்றனர்.

16 வீதமானவர்கள் மட்டுமே தமது பாடசாலை வீட்டு வேலைகளுக்காக இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வொன்றின் முடிவிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக 4427 பெற்றோர்கள் மத்தியிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இன்டர்நெட்டில் தமது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதே தெரியவில்லை என்று இந்தப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பிள்ளைகளுக்கு இது சம்பந்தமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தமது பொறுப்பு என்பதையும் அவர்களுள் 76 வீதமானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்டர்நெட்டில் பிள்ளைகள் என்ன பார்க்கின்றார்கள் என்பதைப் பெற்றோர் தெரிந்து கொள்ளக்கூடிய அல்லது அதைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு முறையை டோக்டோக் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21742%3A2011-05-09-09-41-37&catid=43%3A2010-01-01-15-58-29&Itemid=401