ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி புகார்
ஆன்லைன் குழு மூலம் மகாத்மா காந்தியின் மதிப்பை இழிவுபடுத்துவதாக சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
...உத்தரப்பிரதேச ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அமிதாப் தாகூர், கோம்தி நகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.
தவறான வகையில் காந்தியின் உருவப்படத்தை வெளியிட்டுள்ளது. அவருக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பிவருகிறது என ஃபேஸ்புக் குழுவுக்கு எதிராக அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.
காந்தி குறித்து ஆபாசமான வார்த்தைகள் அந்த ஆன்லைன் குழுவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் இதுபோன்று வெளியிடப்பட்டுள்ளதாக தாகூர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்
http://www.tharavu.com/2011/01/blog-post_7868.html
*** FACEBOOK THREAT ***: ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி புகார் - ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி புகார்
Category:
FACEBOOK சாதித்தவை
Sunday, January 30, 2011
at 10:06 PM